Monday, May 17, 2010

தங்கம் வாங்கு

ஏழையர்க்குச் சோறிடவே சொன்ன நாளில்
எல்லோர்க்கும் உதவச் சொன்ன நல்ல நாளில்
மோழைகளாய் முட்டாள்கள் எவரோ சொன்ன
மூட மொழி தனை நம்பி தங்கம் வாங்கும்
பீடைகளைக் களைவதுதான் எந்த நாளோ
பேச்சற்று நிற்கின்றார் அறிஞர் எல்லாம்
நாளுக்கொரு புதுப் பொய்யைச் சொல்லுகின்றார்
நாட்டினரோ உணராமல் நம்புகின்றார்

0 மறுமொழிகள்: