Friday, May 21, 2010

சோனியாவைப் போற்றுகின்றோம்

பசித்துன்பம் வறுமையென வாழ்நாள் எங்கும்
படுகின்ற துயரமது மேலும் மேலும்
நசுக்கி நிற்க ஏழை மக்கள் அழுது நோக
நாடாள்வார் கோடிகளில் புரளும் கோலம்
உசுப்பி விட ஆயுதங்கள் உயருவதை
உணர்ந்து அதைக் களைய வேண்டும் என்று சொன்ன
திசையெல்லாம் போற்றுகின்ற சோனியாவை
தேசமெங்கும் ஏழைகள் தான் போற்றுகின்றார்

0 மறுமொழிகள்: