Thursday, May 27, 2010

இளையராஜா இறைவன் வரம்

பண்ணைப் புரம் ஈன்றளித்த பாடல் திறம்
பரமனடி பரவுவதில் ரமணர் வரம்
கண்ணுதலான் காதலிக்கும் கவிதைத் திறம்
கண் மயங்க இசை தரலில் கடவுள் ஸ்வரம்
மண்ணிசையும் பண்ணிசையும் மலரும் சுகம்
மனமெல்லாம் மகாதேவன் அருளே பரம்
எண்ணி நின்றால் இவர் இசையும் லயமும் சுகம்
இளையராஜா மனிதருக்கு இறைவன் வரம்

0 மறுமொழிகள்: