Saturday, November 13, 2010

ரத்தோர் என்னும் மிருகம்

சிறு பிள்ளை தனை மிரட்டிக் கற்பழித்த
சிறை யிருந்த அதிகாரி மீண்டும் வந்தார்
உறைந்தார்கள் மனிதரெல்லாம் அய்யோ அய்யோ
உயர் பதவி உதவி யன்றோ காக்கின்றது
மறை நூற்கள் வேதங்கள் மலிந்த நாட்டில்
மனிதர்களே இது என்ன கொடுமை பாரீர்
அறைந் திவரைக் கொல்லுகின்ற கடவுளரும்
அதிகார வர்க்கத்தின் அடிமை தானோ

சிறுமியவர் முகம் பார்த்தார் இலையோ அந்த
சிபிஐ கூட்டத்தார் வெட்கம் இன்றி
உறுதியில்லை குற்றம் என்று சொல்லுகின்றார்
உச்சமாம் நீதி மன்றம் தனிலே நின்று
அருகதையே யற்றவர்கள் எல்லாம் இங்கே
அதிகாரி ஆனதனால் வந்த கேடு
பெருமை மிக்க பாரதமே எங்கள் தாயே
பீழை கொண்டார் உன்னையும் தான் கற்பழித்தார்

2 மறுமொழிகள்:

said...

அந்த மிருகம் சிரிக்கிறதே பார்த்தீர்களா ?

said...

சாதி சொல்லி மதம் சொல்லி
சத்தியத்தைச்
சாகடிக்கும் இந்நாட்டில் என்ன செய்ய
நெல்லைகண்ணன்