Thursday, November 25, 2010

திகைக்கின்றாரே

பசிக்கு ஒரு பழம் எடுத்த இளைஞன் அங்கே
பாருங்கள் சிறையினிலே வாடுகின்றான்
வசிப்பதற்கு இடம் இன்றி ஏழையர்கள்
வதைபட்டு சாலைகளில் உறங்குகின்றார்
அசைப்பதற்கு முடியாமல் கோடிகளை
அப்படியே விழுங்கியவர் வாழுகின்றார்
திசை தோறும் இருக்கின்ற தெய்வங்களே
தினந்தோறும் வணங்குகின்றார் திகைக்கின்றாரே

0 மறுமொழிகள்: