Sunday, November 28, 2010

ஏனில்லை

நாணமின்றிக் கோடிகளை எடுத்துக் கொண்டு
நாட்டி லுள்ளோர் பதை பதைக்க பதட்டமின்றி
ஊன மனம் கொண்டோர்கள் பதவிகளில்
உட்கார்ந் திருக்கின்றார் அரசர்கள் போல்
ஞானமதை உலகிற்கு வழங்கி வென்ற
நற்றமிழர் நாட்டினிலே தான் இந்தக் கேடு
ஏனிவர்கள் குடும்பத்தில் எவருக்குமே
இல்லை அந்த வெட்க மெனும் உயர்ந்த பண்பு

0 மறுமொழிகள்: