Sunday, November 14, 2010

கூசுதிங்கு

வாசலிலே நிற்கின்றார் சோனியாவும்
வளர் தலைவன் ராகுலும் வந்த வண்டி
ஏன் சரியாய் வரவில்லை என்று நோக்க
இருவரையும் அத்வானி பார்த்து விட்டார்
பாசமுடன் இருவரையும் அழைத்தார் அங்கே
பக்கத்தில் உள்ள தன் அறைக்குச் சென்றார்
நேசத்துடன் அவர் மகளும் இருவருக்கும்
நிறைவான செய்தி சொன்னார் அத்வானிக்கு


வாசமான பிறந்த நாள் அன்றே என்று
வாழ்த்தினர் இருவருமே அத்வானியை
ஆசையுடன் இருவருக்கும் தேனீர் தந்தார்
அன்பு மகள் இருவருமே அருந்தி வென்றார்
தூசெனவே அரசியலைத் தூரத் தள்ளி
தூய்மையுடன் வாழ்கின்றார் வடக்கில் நன்கு
ஒசை பெற்ற உயர் குலமாம் தமிழ்க் குலமோ
ஒகோ கோ சொல்லுதற்கே கூசுதிங்கு

0 மறுமொழிகள்: