Saturday, November 27, 2010

ஏழை மக்கள்

பணம் என்னும் பேரரக்கன் பிடியில் சிக்கி
பாவமதைக் குலச் சொத்தாய் ஆக்கிக் கொண்டு
குணம் என்ற ஒரு சொல்லைத் தமிழினிலே
கூடாத சொல்லாக ஆக்கி வாழும்
நிணம் தசை நார் எலும்பெல்லாம் ஊழலாக
நெஞ்சினிலே ஈவிரக்கம் எதுவும் இன்றி
வலம் வருவார் தனைக்கண்டு பொறுமுகின்றார்
வாழ்வதனை இழந்து நிற்கும் ஏழை மக்கள்

0 மறுமொழிகள்: