Thursday, December 27, 2012

கொடுமை

அன்புடையீர் தூத்தூக்குடிக்கு மாநிலங்களவை தி.மு.க. உறுப்பினர் கனிமொழி வந்துள்ளார். இன்று நெல்லை வருகின்ற்றார் போல. அவருக்கு ஒரு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினர் வரவேற்பு விளம்பரம் ஒன்று தருகின்றார். காமராஜரின் வழியில் நடக்கும் கனிமொழி அவர்களே வருக என்று. பெரியார் வழி என்றால் புரிகின்றது அண்ணா வழியில் என்றால் அறிந்து கொள்ள முடிகின்றது. கருணாநிதியின் வழியில் என்றால் கண்டு கொள்ள முடிகின்றது. பிறகு தான் இன்றைய தினமணியில் ஒரு செய்தி பார்த்தேன். கனிமொழி அவர்கள் தூத்தூக்குடி மாவட்டத்தில் ஒரு பள்ளி மாணவி பாலியல் வன்முறைக்குப் பலியானதைக் கண்டித்து தி.மு.க.வினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க வந்துள்ளார். அதன் நோக்கமே திருநெல்வேலி நடாளுமன்றத்திற்குப் போட்டியிடுவதற்கான வெள்ளோட்டமாம். அதற்காகத்தான் படுகொலை செய்யப் பட்ட பள்ளி மாணவி நாடார் வகுப்பைச் சேர்ந்தவர். திருநெல்வேலி நாடாளுமன்றம் நாடார்கள் நிறைந்த தொகுதி. அதனால் தான் சற்குண பாண்டியன் அவர்கள் அந்த மேடையில் நிற்கின்றார். புரிகின்றதா எல்லோருக்கும் பொதுவாக இருந்த பெரியவர் காமராஜரை சாதிக்குள் இழுக்கின்ற கொடூரம்.நமது நாட்டின் சட்டப்படி கனிமொழி அவர்கள் அவரது தந்தையாரின் சாதியாகத் தானே  இருக்க வேண்டும்.

இந்தக் காரணத்திற்காகத்தான் பெரியவர் கருணாநிதி தூத்துக்குடி சம்பவத்திற்காக வருத்தம் தெரிவித்துள்ளார். விருத்தாசலத்திலே ஒரு பாலியல் வன்முறை நடந்துள்ளது. கனிமொழி அங்கே போவாரா.

0 மறுமொழிகள்: