Saturday, December 29, 2012

திருடும் தந்தைகள்

திராவிட இயக்கங்கள் வந்த பிறகுதான் நகரத் தலைவர்களையெல்லாம் நகரத் தந்தை என்று அழைத்தார்கள். மாநகரத் தந்தைகள். ஊராட்சித் தந்தைகள் பேரூராட்சித் தந்தைகள் என்று நிறையத் தந்தைகள்.

எந்தத் தந்தையாவது தன் பிள்ளைகளை ஏமாற்றுவானா. அவர்களுக்கு செய்ய வேண்டிய நியாயமான நன்மைகளைச் செய்யாமல் தன் வயிற்றை வளர்ப்பானா. புரியவில்லை.

ஒரு மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் தன்னை நம்பி தன் இயக்கத்தை நம்பி தங்கள் அரசிற்கு அளிக்கின்ற வரி வருவாயை முறைப்படுத்தித் தங்களுக்குச் செய்ய வேண்டிய காரியங்களை  சிறப்பாகச் செய்யத்தானே  சட்டப் பேரவை உறுப்பினர்களிலிருந்து அமைச்சர் பெருமக்கள வரை ஊதியம் தருகின்ற்னர்.
ஆனால் அரசுப் பணியாள்ர்களாக இருக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் 100 ரூபாய் வாங்கியதாக கைது செய்யப் படுகின்றனர். கோடிக் கணக்கில் அடிக்கின்ற நமது நாடாளும்ன்ற சட்டப் பேரவை உறுப்பினர்களும் நம்மிடம் சம்பள்ம் வாங்கிப் பிழைப்பவர்கள் தானே. அவர்களை ஒன்றுமே செய்ய முடிவதில்லையே ஏன்.

தாங்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்து இறங்கிய பிறகும் தங்கள் மரணத்திற்குப் பிற்கும் தங்களை மக்கள் போற்ற வேண்டும் என்கின்ற எண்ணம் ஒருவருக்கும் இல்லையே.இருக்கின்ற போதே செத்துப் போகும் இவர்களுக்கு அந்த ஆசையெல்லாம் எப்ப்படி வரும்.

0 மறுமொழிகள்: