Monday, February 16, 2009

என்றும் என்றும்

படுத்தவுடன் உறங்குகின்றோம் என்று சொன்னால்
படைத்தவரும் காட்டுகின்றகருணை யது
அடுத்தவர்க்கு நன்மை செய்தோம் என்று சொன்னால்
ஆண்டவனார் அருளிச் செய்த அன்பு அது
கெடுத்தவர்க்கும் நன்மை செய்தோம் என்று சொன்னால்
கேட்காமல் இறைவன் தந்த பண்பு அது
தொடுத்து இந்த நற் குணங்கள் அனைத்தும் தர
தொழுது நிற்பேன் என்னிறையை என்றும் என்றும்

1 மறுமொழிகள்:

said...

தினந்தோறும் இரவில் தூங்கப்போகும்முன் சொல்லி வணங்கலாம் போல உள்ள வரிகள் அய்யா!