Wednesday, February 4, 2009

நாடொழிக்க

திருடியதாய்ச் சொல்லி ஏழைச் சிறுமி தன்னை
தேம்பியழத் துன்புறுத்தும் காவலர்கள்
அறிவிழந்த கொடுமையினைக் காணும் நேரம்
அடி வயிறு கொதிக்கிறது வறுமையென்னும்
கொடுமையினை வைத்தன்றோ ஏழைகளை
கூப்பிட்டுக் கூப்பிட்டுக்கொல்லுகின்றார்
அடியவராய்க் கோடிகளைக் கொள்ளையிட்டார்
அடிகளிலே இவர் விழுந்து வணங்குகின்றார்



சத்தியத்தின் பெயரிலே கொள்ளையிட்டார் மேலே
சரியாக வைப்பாரோ கைகளினை
மெத்தை வீட்டுத் தலைவர்களாய் மாறி நிற்கும்
மேல்மினுக்கிக் கொள்ளையரைப் பிடிப்பாரோ தான்
எத்தர்களை மக்களது வரிப் பணத்தை
ஏய்த்திங்கு வாழ்வாரை அடிப்பாரோ காண்
செத்தொழிந்து போகாமல் மனிதரென்று
சீர் கெட்டார் வாழுகின்றார் நாடொழிக்க

0 மறுமொழிகள்: