Thursday, February 26, 2009

கத்தி ஏந்தி

பெரும்பான்மை நான் இங்கு சிறுபான்மை நீ இங்கு
பெரியவன் நான் உணர் நீ
பேசவோ பாடவோ உனக்கில்லை உரிமை நீ
பேசினால் நாக்கறுப்பேன்
அரும்பவே கூடாது உனக்கிங்கு எண்ணங்கள்
அரும்பினால் அழித்தொழிப்போம்
ஆசையோ பாசமோ கொள்ளாதே கொண்டாலே
அடிப்போம் நீ ஒதுங்கிக் கொள்ளு


உலகெங்கும் இந்நிலை இதுவேதான் இங்கேயும்
உணர்வாரும் பேசவிலையே
உண்மையை ஒழிப்பதில் வெல்பவர் தானெலாம்
உயர்ந்தார்கள் வெட்கமிலையே
கலகங்கள் செய்வதும் கண்ணியம் கொல்வதும்
கைக் கொண்டார் நாணவிலையே
காந்தியின் தேசமாம் சொல்கிறார் சொல்கிறார்
கைகளில் கத்தி ஏந்தி

1 மறுமொழிகள்:

said...

ஐயா வணக்கம்.உங்கள் கவிதை அருமை.