Saturday, February 7, 2009

அழுது நிற்கும்

கோடிகளாய்ச் சேருங்கள் ஏழைகளின்
குமுறல்களை அழுகைகளைப் புறந் தள்ளுங்கள்
பேடிகளாய் வாழுங்கள் சேர்த்து விட்ட
பெரும் பொருளை பத்திரமாய்க் காத்திடுங்கள்
நாடி தளர்ந்தொடுங்கி உயிர் பிரியும் நேரம்
நடந்ததெல்லாம் ஒரு நொடியில் நினைவில் வரும்
கூடி அழும் உறவு எல்லாம் உமக்கு அல்ல
கோடிகளை கணக்கிட்டே அழுது நிற்கும்

0 மறுமொழிகள்: