Saturday, February 7, 2009

அழியச் செய்தோம்

தமிழுக்காய் தங்களையே அழித்துக் கொண்டோர்
தாய் தந்தை குடும்பத்தை மறந்து நின்றோர்
அமிழ்தொழிக்கும் இனிய நந்தம் மொழி தமக்காய்
அன்றிருந்து வறுமை தமக்கு ஆளாய்ப் போனோர்
இமை மூடும் வரை மொழிக்காய் தம்மைத் தந்தோர்
இல்லையென்று போனாரா இன்னும் வாழ்ந்தார்
நமை நினைத்தால் கேவலமே மிஞ்சும் அந்த
நல்லவர்கள் குடும்பமெல்லாம் அழியச் செய்தோம்

0 மறுமொழிகள்: