Wednesday, February 18, 2009

குறட் கருத்து

உறவு அற்று தொழிலும் அற்று பொருளும் அற்று
உணவும் அற்று ஒன்று மற்று நிற்பார் தம்மின்
அழி பசியை அழித்தவர்க்கு உணவு தந்து
அன்றாடம் காத்து நிற்பார் அது மட்டுமே
செறிவாகக் காப்பாக இருக்கும் என்றும்
சேமிப்பு அது ஒன்றே இறுதி வரை
அறிவீர் நீர் மானிடரே உணவளியும்
ஆண்டவனின் கணக்கினிலும் முதலிடமே


குறள்

அற்றார் அழி பசி தீர்த்தல் அ தொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி

0 மறுமொழிகள்: