Tuesday, June 2, 2009

கொடுவழியினிலே

வன்முறையற்ற வழிமுறை ஒன்றை
வகுத்தே தந்தார் காந்தி மகான்
நன்முறை ஏற்றார் மண்டேலாவும்
நல்லவர் மார்ட்டின் லூதருமே
தன் முறை யென்று சொன்னாரா? எம்
தாயக முறையே இதுவென்றார்
வன்முறையாளர் அவரைக் கொன்றார்
வன்முறையாம் கொடு வழியினிலே

0 மறுமொழிகள்: