Sunday, June 21, 2009

குமுறுகின்றார்

வென்று விட்டார் என்றவுடன் ஊர்வலங்கள்
வீதியெங்கும் தோரணங்கள் மக்கள் வெள்ளம்
கொன்று விட்டார் என்றெல்லாம் கூப்பாடுகள்
கோடிகளை அவர்க்களித்துக் கொண்டாட்டங்கள்
நின்றபடி வந்தவரை வாழ்த்தி வாழ்த்தி
நிலை குலைந்து நின்றன்று ஆடியவர்தான்
கொன்றிடுவோம் கேவலம் இத் தோனிதன்னின்
கூட்டத்தை என்றெல்லாம் குமுறுகின்றார்

0 மறுமொழிகள்: