Saturday, June 13, 2009

நான் பாடுவேன்

அன்பு செய்ய யார் இவர்க்குச் சொல்லித் தந்தார்
அடடா நான் வியந்து நின்றேன் மகிழ்ந்தும் நின்றேன்
பண்பு நிறை ஜானகித் தாய் இருவரையும்
பைந்தமிழாய் வளர்த்துள்ளார் துணையாய் வந்த
செண்பகங்கள் பானுவோடு ராதா என்னும்
சிறப்பான மருமகள்கள் துள்ளித் துள்ளி
என் மனத்தைக் கொள்ளை கொண்ட ஆயுஷ் பேரன்
எல்லோரும் நலம் வாழ நான் பாடுவேன்

1 மறுமொழிகள்:

said...

கி.வா.ஜ; கிருபானந்த வாரியார்,கண்ணதாசன் இவர்கள் பின்...உங்களைத் தான் எல்லாவற்றையுமே அழகான கவி ஆக்குவதைப் பார்க்கிறேன்.