Tuesday, June 23, 2009

இளைஞர் இனம்

பணம் மட்டும் வாழ்க்கையென்று பகட்டுக் காட்டும்
பண்பற்ற மனிதர்கள் தம் வாழ்க்கை கண்டு
குணம் விட்டுப் பணம் தேட முயலுகின்றார்
குறை மனிதர் கைதாகி அலறுகின்றார்
பிணம் போலப் பெரும் பணத்தைச் சேர்த்து நின்றார்
பெரும் பதவி தனில் அமர்ந்து புளுகுகின்றார்
இனம் காக்க நாடு காக்க வாழ்ந்த காந்தி
ஏழை காமராஜர் கக்கன் காணவில்லை


இரு வேட்டி மட்டும் உடையென்று வாழ்ந்த
இந்தியத்துப் பேரருளாம் காந்தி மகான்
மறு வேட்டி இல்லாமல் வாழ்ந்திருந்த
மாபெரிய தோழர் எங்கள் ஜீவானந்தம்
கருவுற்றுப் பெற்றெடுத்த தாய்க்காய்க் கூட
கண்ணியத்தை இழக்காத காமராஜர்
திருவுற்ற இந்த நாட்டில் வாழ்ந்தார் என்றே
தெரியாமல் இருக்கிறதே இளைஞர் இனம்

0 மறுமொழிகள்: