Friday, June 26, 2009

கரிய செல்வம் மைக்கேல் ஜாக்சன்

இறந்து விட்டான் என்கின்றார் அவனை நாம்தான்
இழந்து விட்டோம் என்பதனை மறந்தவராய்
பரந்து பட்ட உலகமெங்கும் பாப் இசையால்
பட படக்க வைத்தவனை ஜாக்சன் தன்னை
மறைந்து விட்டான் என்கின்றார் அய்யோ அய்யோ
மனங்களுக்குள் நிறைந்தவனா மறைவான் இல்லை
நிறைந்திருப்பான் உலகமெங்கும் கோடி கோடி
நெஞ்சத்தில் மைக்கேலாம் கரிய செல்வம்

1 மறுமொழிகள்:

said...

இருக்கையிலே எடுத்தெறிந்து வீசிவிட்டார்..!!
இறந்தபின்னே மாலைபோட்டு விசித்தழுவார்..!!

ஐயா அருமை..!! அருமை.!!
இந்த நிலை எங்குமே உள்ளது போலும்..!!