Tuesday, June 2, 2009

வாழ்வதற்கு

மதங்களின் பேரால் கொல்லுகின்றார்
இனங்களின் பேரால் கொல்லுகின்றார்
மனிதர்கள் என்ற உணர்வே இன்றி
மறுபடி மறுபடி கொல்லுகின்றார்
விதம் விதமாகக் கொலைகளைப் புரிந்து
வீணே மனிதர் மாளுகின்றார்
விரிந்த நல் இதயம் பரந்த நல்லுணர்வு
வேண்டும் மனிதம் வாழ்வதற்கு

0 மறுமொழிகள்: