Monday, April 12, 2010

ஆரேனும் எங்களைக் காத்திட வாருமே

போலி மருந்துகள் பொறுப்பில்லா மருத்துவர்
போனது போகட்டும் என்றுள்ள மக்களும்
காலி இடங்களைக் கைப் பற்றும் காலிகள்
கணக்காகக் காப்பாற்றும் அரசியல் போலிகள்
வேலியாய்ப் பயிரினை மேய்ந்திடும் காவலர்
விபரம் தெரிந்துமே ஒதுங்கிடும் மக்களும்
ஆலிலைக் கண்ணனே ஏசுவே அல்லாவே
ஆரேனும் எங்களைக் காத்திட வாருமே

0 மறுமொழிகள்: