Friday, April 23, 2010

சிவனுக்குக் குமரனுக்கு

கருவறையில் தமிழ் பாடும் ஆதி சைவர்
காண்பதற்குக் கோவைக்குச் செல்ல வேண்டும்
திருக் காட்சி பேரூரில் சிவத் தலத்தில்
தெள்ளு தமிழ் அவினாசிக் கோயில் தன்னில்
அறிவாரா மற்றுமுள்ள ஆதி சைவர்
அறிந்தவரும் தமிழினிலே பாட வேண்டும்
விருந்ததுவே இறைவனுக்கு தமிழ்ச் சங்கத்தில்
வீற்றிருந்த சிவனுக்குக் குமரனுக்கு

0 மறுமொழிகள்: