Thursday, April 22, 2010

தவமிருந்து குழந்தைகளை

பிடிக்கிறதா படிப்பதற்கு என்று எங்கும்
பெற்றவர்கள் பிள்ளைகளைக் கேட்டதுண்டா
நடிக்கிறதோ பிள்ளைகளின் எதிர் காலத்தை
நலமாக்கச் செய்கின்ற முயற்சி என்று
வடிக்கின்றார் குழந்தைகளும் கண்ணீர் இங்கு
வாய் திறக்க முடியாமல் பள்ளி செல்வார்
தடித் தடியாய்ப் புத்தகங்கள் சுமக்கவென்றே
தவமிருந்து குழந்தைகளைப் பெற்றுள்ளாரே

0 மறுமொழிகள்: