Thursday, April 22, 2010

இரக்கமில்லா அன்னை தந்தை

வரிசையிலே நிற்கின்றார் குழந்தைகளை
வதைக் கூடப் பள்ளியிலே சேர்ப்பதற்கு
சிறு குருவி போல் இருக்கும் அழகுகளின்
சிந்தனையை உயர்வுகளை ஒழிப்பதற்கு
பரிவு இன்றிப் பாசமின்றி பண்பு இன்றிப்
பணம் கொள்ளும் பள்ளிகளில் கொண்டு கொல்ல
அறிவில்லை அன்பு இல்லை அன்னை தந்தை
அவர்க்கேன் தான் இரக்கமில்லை புரியவில்லை

1 மறுமொழிகள்:

said...

அரசாங்க பள்ளி கூடங்கள் சரி இல்லாத காரணம் தான் ஐயா... பெற்றோர்களுக்கு இந்த நிலை... அவர்களை சொல்லி குற்றமில்லை...

கவிதை மிக நன்று...