Wednesday, April 14, 2010

அம்பேத்கார் தான்

ஊருண்ண உழைத்தவரை உழைத்துழைத்து
ஓடாகத் தேய்ந்தவரை மனிதர் தம்மை
காருண்யம் இல்லாராய் அடிமையாக்கிக்
கடவுள் என்றும் மதங்கள் என்றும் பொய்கள் கூறி
வேரொடு அவர் தம்மை அடிமையாக்கி
வீணர் பலர் இந்நாட்டில் ஆடும் ஆட்டம்
தேர்ந்தவரை எதிர்த்து வென்றார் அம்பேத்கார் தான்
தெளிவான சட்டம் கண்ட மாமேதை காண்

0 மறுமொழிகள்: