Monday, April 19, 2010

சசிதரூர்

கோடிகளைக் குவிக்கின்றார் மட்டைப் பந்தில்
கொள்ளையர்கள் வாழுகின்றார் மணமாய் இங்கு
கேடிகளே இவற்றினிலே முதல் இடத்தில்
கேட்காமல் இளைஞர்களும் மயங்குகின்றார்
நாடி இதன் அடிப்படையை வரித் துறையும்
நாட்டாரின் நன்மைக்காய்ப் பார்க்கப் போனால்
ஒடி விட்டார் ஒரு அமைச்சர் காதலிக்காய்
உச்சக் கட்டத் தவறு செய்து விலகி விட்டார்

0 மறுமொழிகள்: