Saturday, April 17, 2010

கல்வி விற்ற கொடுமை

பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்ய
பாரதியாம் தமிழாய்ந்தான் சொல்லிச் சென்றான்
பள்ளித் தலமனைத்தும் கொள்ளை செய்யப்
பாங்காக வழியமைத்தார் அரசியலார்
எள்ளி நகையாடுகிறாள் கலை மகளும்
ஏய்ப்பவரின் கைகளிலே கல்வி விற்ற
கொள்ளிகளை ஒழிப்பதற்கு யாரும் இல்லை
கொள்கையில்லை நேர்மை இல்லை உண்மை இல்லை

1 மறுமொழிகள்:

said...

ஐயா!மிகுந்த உண்மை!
கலைமகளைக் காசுக்கு விற்கும் கொடுமை!