Saturday, May 22, 2010

என்ன செய்ய

நன்றி கொன்ற மானிடர்கள் என்றும் எங்கும்
நலமாக வாழ்ந்ததுவாய்ச் சரிதம் இல்லை
கொன்றழிக்கப் பிறந்தவர்கள் என்றும் எங்கும்
குல மானம் இன மானம் காப்பதில்லை
தன் மனைவி தன் குழந்தை தன்னைக் காத்துத்
தற்கொலைக்கு மற்றவரைத் தூண்டி விடும்
சின்ன மனத் தலைவர்களைத் தலைவர் என்னும்
சிறு பிள்ளைத் தனத்தாரை என்ன செய்ய

1 மறுமொழிகள்:

said...

அன்புள்ள கண்ணன் அய்யா அவர்கட்கு,

என்ன செய்ய கவிதை அற்புதமான படைப்பு. ஓவ்வொரு தீக்குளிப்பயும் நினைவூட்டுகிறது. ஆனால் தலைவர் சமூகம் இதனைப் படிக்குமா?. படித்தாலும் திருந்துமா?

கோ.சேஷாத்ரி.