Wednesday, December 5, 2012

யாருக்கும் வெட்கமில்லை

தமிழ்நாடு இருளில் தவிக்கின்றது. அரசோ எந்த விதக் கவலையும் கொள்வதாகத் தெரியவில்லை. விழாக்களும் கோலாகலங்களும் நடத்தவும் வெட்கமுறவில்லை.

அண்டை மாநிலங்களில் மின் வெட்டு இல்லை. எதையாவது எதிர்த் தரப்பினர் சொன்னால் அது குஜராத்தில் இருக்கின்றது  உத்தரப் பிரதேசத்தில் இருக்கின்றது என்று பெரியவர் கருணாநிதி அரசுப் பொறுப்பில் இருக்கையில் பதில் சொல்வார். நான் அப்போதெல்லாம் அவரை மேடைகள் வாயிலாகக் கேட்டிருகின்றேன். நீங்கள் தான் எங்களின் முதல்வர். நாங்கள் உங்களிடம் தான் கேட்போம். நீங்கள் அதற்கு வேற்று மாநிலங்களைக் காட்டுவது.
தன் தந்தையிடம் குழந்தைகள் ஏதேனும் கேட்டால் எதிர்த்த வீட்டுப் பிள்ளை
களின் தந்தை  அவர்களுக்கு வாங்கிக் கொடுத்தானா. பக்கத்து வீட்டுக்காரன் வாங்கிக் கொடுத்தனா என்றெல்லாம் பதில் தருவது பண்பாட்டுக் குறைவு என்றுஇந்த மாநிலத்தின் பொறுப்பிலே இருக்கின்ற நீங்கள் தான் எங்களுக்கு வேண்டியவற்றைச் செய்ய வேண்டும் என்று.

இன்று மின் வெட்டிலும் மைய அரசைக் குறை கூறுவது எந்த விதத்தில் நியாயம். தமிழ்நாடு அரசு முயல வேண்டும். முயல்வதாகவே தெரியவில்லை.
பாரதிதாசன் பாடல் வரிகள் தான் நினைவிற்கு வருகின்றது. வெட்கமில்லை வெட்கமில்லை இங்கு யாருக்கும் வெட்கமில்லை.தினமலர் நாளிதழ் ஒரு நிழற்படம் வெளியிட்டிருந்தது. சட்டப் பேரவை ஒளி வெள்ளத்தில்பக்கத்திலே
ஒரு செய்தி தமிழ்நாட்டில் மின் வெட்டு 16 ம்ணி நேரம் என்று.

தினமலர் இப்படிச் செய்திகளை வெளியிடுவதனால் அதற்கு அரசு விளம்பரம்
5 மாதங்களாகத் தரப் படுவதில்லை.

பத்திரிக்கைச் செய்திகளை மக்களின் குரலாக எடுத்துக் கொள்வது நேரு
காமராஜர் போன்றோரது காலம்.

2 மறுமொழிகள்:

said...

எங்களுக்கா வெட்கம் இல்லை.

காரியம் நடக்காது என்று தெரிந்து இருந்தாலும் ஐந்து நட்சத்திர விடுதியில் தான் தங்குவோம்.

அந்நிய முதலீட்டை எதிர்ப்போம். ஆனால் , ஓட்டு மட்டும் ஆதரித்து போடுவோம். ஆனா , மைய அரச வலியுறுத்துவோம். (எதுக்கு ???)

தனக்கு எதாவது பிரெச்சனை என்றால் மட்டும் தான் போராடுவோம். இல்லை என்றால் மானட மயிலாட பார்ப்போம்.

குடும்பத்துல எதாவது பணம் கஷ்டம் என்றால், வேற எங்க நல்ல கிடைக்குதோ அங்கே போய் சேருவோம். (கொ பா சே ) (கொச்சை யா பேசுவோம் )

எங்களுக்கு நாங்களே "சாதி வெறியன்" என்று பட்டம் சூட்டி கொள்வோம். பெரியார் சிலைக்கு மாலை போடுவோம்.



எங்களுக்கா வெட்கம் இல்லை.

எங்களுக்கா வெட்கம் இல்லை.

எங்களுக்கா வெட்கம் இல்லை.


அன்புடன்
தெயவீகராஜன்

said...

அய்யா! வணக்கம்.

இந்த 'டெசோ' கருணாநிதியை வார்த்தைக்கு வார்த்தை பெரிய(இ)வர் என்று எழுதுகிறீரே! அது வந்த விதத்தில்?

வயதால் என்று கூறுவீராயின் பொருந்தலாம். குணத்தால், செயலால் என்றால் கேட்போர் சிரிப்பர். நீங்களும் அப்படிக் கூறமாட்டீர் என்பதை நான் அறிவேன்.

இருப்பினும் இந்த 'டெசோ' கரு-நா-நிதி, லேட் கருணாநிதி ஆகும் நாளே தமிழர் விடுதலை நாளாக நான் கருதுகின்றேன்.