Wednesday, March 4, 2009

கருணை செய்க

குடும்பத்தைக் காத்திடக் கல்வியை விட்டவன்
கொண்டிட்டான் பெரும் விருதை
கூவியே நிற்கின்றான் வெற்றியது தந்தையின்
குளிர் ஆசி தந்ததென்று
திடும் திடும் தாளத்தில் ராகத்தில் ஒசையில்
தெய்வத்தின் உதவி கொண்டான்
தெளிவாகக் கூறினான் புகழெலாம் அல்லாவின்
திருவடி தமக்கு என்று



ஆண்டவன் அருள் தனை நன்குணர்ந்தான் அவன்
அதனாலே உயருகின்றான்
ஆஸ்கார் விருதினை ஆண்டவன் தந்ததாய்
அன்புடன் கூறுகின்றான்
வேண்டியே நிற்கின்றேன் இறையினை அய்யனே
வெற்றிகள் அருளிச் செய்க
வெல்லாத பரிசின்றி ரகுமானும் மென்மேலும்
வென்றிடக கருணை செய்க

0 மறுமொழிகள்: