Tuesday, March 10, 2009

உணருகின்றேன்

கற்றவர் அனைவரும் பெற்றவனாய் என்னைக்
கண்ணியப் படுத்துகின்றார்
உற்றவரோ எந்தன் உயர்வினைக் கண்டு
உள்ளுக்குள் புலம்புகின்றார்
மற்றவரோ தம் மனத்துக்குள் வியந்து
மலிந்த சொல் வீசுகின்றார்
உற்றவனே எந்தன் ஆண்டவனே இவை
உன் செயல் உணருகின்றேன்

0 மறுமொழிகள்: