Friday, March 13, 2009

வரமாய் வர

எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று
ஏற்றங்கள் சொல்லி நின்றார்
இனிய நம் தமிழிலே சொல்லியே தமிழர்கள்
எல்லோர்க்கும் மகிழ்ச்சி தந்தார்
அல்லா ரக்கா ரகுமான் ஆஸ்கரே வென்றாலும்
அடக்கத்தின் உருவம் கண்டீர்
அதனால்தான் தந்தையின் ஆசியால் வந்தது
ஆஸ்கரும் என்று சொன்னார்


ஆண்டவன் மொழி தந்தை அனைவருக்கும் நன்றி
ஆக்கிய ரகுமான் அவர்
அன்னையின் ஆசியை அன்பதன் ஆசியாய்
அனுபவித்து உணர்ந்து வென்றார்
வேண்டுவோம் ரகுமானின் வெற்றிகள் மென்மேலும்
விரிந்திட வேண்டி நிற்போம்
வெள்ளை மனத்தவர் ரகுமானின் வெற்றிகள்
விண்ணவர் வரமாய் வர

0 மறுமொழிகள்: