Monday, March 23, 2009

நெஞ்சம் பதறுதே

கூட்டணியாய்க் கூட்டணியாய்க் கூட்டமாய் வருவார்
இவர் கூட்டணியாய் வருவார்
கொள்கை கொடி என்றெல்லாம் கோஷங்கள் இடுவார்
இவர் கோஷங்கள் இடுவார்
நாட்டணியாய் இன்றும் வாழும் நல்லவரெல்லாம்
அந்த நல்லவரெல்லாம்
நாணிக் கோணித் துன்பமுற வேடங்கள் கொள்வார்
இவர் வேடங்கள் கொள்வார்
பாட்டனாக பெருமை சேர்த்த காந்தி மகானை
அந்த காந்தி மகானை
பைத்தியம் போல் ஆக்கி இவர் பதவிகள் கொள்வார்
இவர் பதவிகள் கொள்வார்
கேட்க இங்கு யாருமில்லை யாருமில்லையே
ஆமாம் யாருமில்லையே இந்தக்
கேடு கெட்ட மனிதர் ஆட்டம் ஒயவில்லையே
இன்னும் ஒயவில்லையே
பாட்டுப் பாடி இவரையுமே புகழுகின்றாரே
சிலர் புகழுகின்றாரே அந்தப்
பாவிகளைக் காண்கையிலே நெஞ்சம் பதறுதே
நமது நெஞ்சம் பதறுதே

0 மறுமொழிகள்: