Thursday, March 19, 2009

தேர்தல் வெல்க

மக்களாட்சி மலர்வதற்காய் தேர்தல் என்னும்
மாபெரிய கடமையினை ஆற்ற வேண்டும்
இக்கணமே அனைவருமே எழுந்து நிற்பீர்
இனிய அந்த பொத்தானை அழுத்தித் தோற்பீர்
தக்கவர்கள் தகாதவர்கள் என்று எல்லாம்
தடுமாறித் தொலையாதீர் தலைவர் தங்கள்
மக்களவர் ஆட்சி அது மலர்வதற்காய்
மனம் கொண்டு நடத்துகின்ற தேர்தல் வெல்க

2 மறுமொழிகள்:

said...

//இனிய அந்த பொத்தானை அழுத்தித் தோற்பீர்//

//தலைவர் தங்கள்
மக்களவர் ஆட்சி அது மலர்வதற்காய்
மனம் கொண்டு நடத்துகின்ற தேர்தல்//

சரியாக சொன்னீர்கள். மிகவும் ரசித்தேன்.

said...

அன்புள்ள ஐயா,விஜய் தொலைக்காட்சியின் தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு நிகழ்ச்சியில் அடிக்கடி உங்களைப் பார்த்து,கேட்டு மகிழும் வாய்ப்பு இருந்தது.

அந்த நிகழ்ச்சி முடிந்தது வருத்தமாக இருக்கிறது..

பாட்டுக் கலந்திடவே வந்த பத்தினிப் பெண்ணுடனான கூட்டுக் களிக்கு நீங்கள் அளித்த விளக்கம் புதுமையான ஒன்று..இன்னும் நினைவில் நிலவுகிறது..

அவை போன்ற இலக்கியத் துளிகளை உரைநடையில் தரலாமே..இளையவர்கள் விரும்பி வரவேற்(பேன்)பர்...