Saturday, April 10, 2010

இந்தியராக வாழ்வோம்

அவர் ஆண்ட போதிலே நிலையென்ன தெரியுமா
அவர் என்ன கேட்பதென்னை
ஆட்சியில் இருப்பவர் கேட்கின்ற கேள்வியில்
அறியாமை துள்ளுதிங்கு
அவர் வேண்டாம் என்றுதான் உங்களை அம்ர்த்தினார்
ஆட்சியில் மக்களிங்கு
ஆகவே மக்களின் ஏக்கங்கள் தீர்ப்பதே
அய்யா உம் வேலை யிங்கு
எவர் ஆளும் போதிலும் நிலையிதே கேவலம்
இனிய எம் தமிழ் மக்களே
இவர் மாறி அவர் வரின் இதுவேதான் கேள்வி நாம்
என் செய்ய தமிழ் மக்களே
அவர் ஊழல் இவர் சொல்ல இவர் ஊழல் அவர் சொல்ல
அனைத்தையும் நாம் மறப்போம்
எவருக்கோ வாக்கினை அளித்து நாம் என்றைக்கும்
இந்தியராக வாழ்வோம்

2 மறுமொழிகள்:

said...

அருமையான பா ஐயா!
தமிழுக்கு எம் வணக்கங்கள்!!

said...

கவிதையின் பொருள் மனதை நெருடுகிறது..... அதுவும் கடைசி மூன்று வரிகள்... நான் இதை எதிர்பார்க்கவில்லை....