Thursday, April 29, 2010

கேதான் தேசாய்

இத்தனை நாள் எதுவும் தெரியாமலா இருந்தார்
இது என்ன அரசாங்கம் புரியவில்லை
கொத்து கொத்தாகக் கோடிகள் தங்கமோ
கொல்லுலை இரும்பு போல்கணக்கின்றி அய்யகோ
செத்தா இருந்தது அரசாங்கப் பிரிவுகள்
சிறியரோ ஏழையோ திருடினால் கொல்கின்றிர்
மெத்தப் படித்தவர் கேதனாம் தேசாயாம்
மேலிருப்போரே இது தெரியாதா உமக்கெலாம்

சத்தியம் செய்வீரோ தெரியாது என்று நீர்
சரித்திரம் பழிக்காதா உங்களைப் பேய் என்று
எத்தனை எத்தனை பேர் இங்கு காத்தீரோ
எப்படி காந்தியின் பெயரை நீர் சொல்லலாம்
மொத்தமும் பணத்தினால் என்று நீர் வாழ்கின்ற
முறையற்ற வாழ்விது வாழ்வென ஆகுமோ
செத்தொழிவீர் உம் வம்சமும் அழிந்திடும்
சிரிக்காதீர் இது உறுதி நான் உரைக்கின்றேன்

1 மறுமொழிகள்:

said...

ஐயா, உங்கள் வசைமாரி வெள்ளத்தில் இந்த நச்சு காளான்கள் அழிந்தே போகட்டும்.இதற்க்கு அந்த எல்லாம் வல்ல பெரிய கடவுள் அருள் புரியட்டும்.