Saturday, September 6, 2008

என் சொல்வேன்

குற்றங்கள் சொல்வதா உடனே குதிக்கின்றார்
  கொண்டுள்ள நிறைகளைச் சொல்லிட வெறுக்கின்றார்
கற்றவர் இவர்கள் தம் தவறுகள் காண்கையில்
  கவலைகள் இல்லையே சிரிப்புத்தான் வருகுது
உற்றவர் பெற்றவர் எவரென்ற போதிலும்
  ஊரிலே வாழ்கின்ற நல்லவர் ஆயினும்
மற்றையோர் பெருமையைத் தாங்கிட முடியாராய்
  மனத்திற்குள் அழுகின்ற கொடுமையை என் சொல்வேன்

0 மறுமொழிகள்: