Monday, September 15, 2008

ஆத்தி சூடி

ஆறுவது சினம் என்று அவ்வை சொன்னார்
  அவ்வார்த்தை தெளிந்தீரோ நண்பர்களே
  தேறி அந்த வார்த்தையினை நீர் உணர்ந்தால்
  தெய்வத்திற் கிணையாவீர் நீரும் இங்கு
  ஆறி விடும் சினம் கொஞ்சம் அமைதி காத்தால்
  அதை விட்டு உடனடியாய் வெகுண்டீரென்றால்
  நாறி விடும் நம் வாழ்க்கை சுற்றம் நட்பு
  நமை விட்டு ஒடி விடும் சிறந்து வெல்வீர்

0 மறுமொழிகள்: