Saturday, September 6, 2008

ஈந்திடும் இறைவனே

 வாருங்கள் வாழலாம் முறையான வழிகளில்
  வளமான வள்ளுவர் காட்டிடும் வழிகளில்
  சேருங்கள் மனிதரை ஒன்றாக அன்பினில்
  சேர்த்ததைப் போற்றுங்கள் நட்பென்ற உயர்வினில்
  நானென்றும் நீயென்றும் பிரிவினை இல்லாமல்
  நாமென்று இணைந்தங்கு நல்லதைப் பேணுங்கள்
  தானும் நம் உடனாகி அன்பெல்லாம் அருளுவான்
  தாயோடு தந்தையாய் ஈந்திடும் இறைவனே
   

0 மறுமொழிகள்: