Thursday, September 25, 2008

அதுவே போதும்

  வள்ளுவர்க்குச் சிலை வேண்டாம் நிறுத்திக் கொள்வோம்
  வஞ்சகத்தைப் பொய்மையினை ஒழித்தால் போதும்
  தெள்ளு தமிழ் நாடென்று ஆட வேண்டாம்
  தீங்கின்றி நன்மைகளைச் செய்தால் போதும்
  அள்ளி விடும் சிலம்பென்று அலற வேண்டாம்
  அன்னையரை அழுகையின்றி காத்தால் போதும்
  உள்ளு தொறும் தவறு செய்ய நாணம் கொண்டு
  ஊர் போற்ற வாழ்ந்து விட்டால் அதுவே போதும்

0 மறுமொழிகள்: