Sunday, September 14, 2008

அந்தோ அந்தோ?

 காந்தி காமராசரோடு ஏழைக் கக்கனுக்கும்
  கண்ணியமாய் வாழ்ந்து இன்றும் வாழ்ந்திருக்கும்
  சாந்தி வழி காட்டிச் சென்ற அனைவருக்கும்
  சரித்திரத்துப் பெருமையான அவருக்கெல்லாம்
  நேர்ந்த ஒருகொடுமையினைக் கண்டேன் இங்கு
  நெஞ்செல்லாம் வேகுதையா கண்டோரெல்லாம்
  வாழ்ந்த அந்த மானிடரின் சிலைகளுக்கு
  வழங்குகின்றார் மாலைகளை அந்தோ அந்தோ

0 மறுமொழிகள்: