Thursday, September 25, 2008

துணையாய்க் கொண்டேன்

 நல்லவர் போல் நடிக்கின்றார் அய்யா நீங்கள்
  நலம் தானா என்றெல்லாம் வினவுகின்றார்
  சொல்லுகின்ற சொல்லெல்லாம் சொல்லும் போதே
  சூது மனம் கொண்டேதான் சொல்லுகின்றார்
  வெல்லுதற்கு இயலாராய் உள்ளம் எல்லாம்
  வினை எண்ணம் கொண்டாராய் மேலும்மேலும்
  கொல்லுதற்கே முயலுகின்றார் என்ன செய்ய
  குறளரசர் வழி ஒன்றே துணையாய்க் கொண்டேன்

0 மறுமொழிகள்: