Wednesday, September 3, 2008

பேரனோடு பேத்தியும்

 பேரனோடு பேத்தியுமே பார்க்க வந்தார்
  பெருமையுடன் நானிருந்தேன் அவர்களோடு
  சேரனோடு பாண்டியனும் சோழனுமே
  சேர்ந்திருந்த அக்காலப் பெருமையோடு
  ஆரிவர்கள் எதிர்காலம் என் பெயரை 
  அப்படியே உலகுக்குச் சொல்லி நிற்பார்
  பேரனோடு பேத்தியுமே நலமாய் வாழ
  பெருங் கடவுள் தனை வணங்கி நிற்கின்றேனே
  

0 மறுமொழிகள்: