Monday, September 22, 2008

செய்யப் பாரும்

 அடுத்தவரைக் குறை சொல்ல என்று சொன்னால்
  ஆடுகின்றீர் ஒடுகின்றிர் பாடுகின்றீர்
  தொடுத்தவரைக் குறை சொல்லி பொறாமைத் தீயால்
  துள்ளுகின்றீர் வெவ்வேறு வடிவம் காட்டி
  படித்தவரே இதையெல்லாம் செய்து நின்றீர்
  பாவிகளே படித்து என்ன பயன் தான் கண்டீர்
  அடுத்தவரைக் குறை சொல்லல் விட்டு விட்டு
  அய்யா நீர் ஏதேனும் செய்யப் பாரும்

0 மறுமொழிகள்: