Friday, January 1, 2010

கருதினாயோ

கற்பழிக்கும் காவலர்கள் அவரை நன்கு
காப்பாற்றும் அரசியலார் என்றும் நாட்டில்
நற் செயல்கள் செய்வதிலே விருப்பம் இல்லா
நாடாள வந்து விட்ட பெரு மனிதர்
இற் புறத்தை விட்டு வெளி வரவே எண்ணா
இந்தியத்து வாக்காளர் இவரையெல்லாம்
கற்புடையோர் ஆக்குதற்கு எம்மிறையே
காலமது இல்லையென்று கருதினாயோ

1 மறுமொழிகள்:

said...

//இவரையெல்லாம்
கற்புடையோர் ஆக்குதற்கு எம்மிறையே
காலமது இல்லையென்று கருதினாயோ...///

வாழ்க உங்கள் தமிழ்தொண்டு...!!!