Saturday, January 2, 2010

உணர்வீர் என்றார்

இசை நிகழ்ச்சி ஒன்றிற்கு தலைமை தன்னை
ஏற்க வேண்டும் என்று சிலர் அன்று இங்கு
வசை யின்றி வாழ்ந்திருந்த காமராசர்
வாசலுக்கு வந்து நின்று வேண்டி நின்றார்
திசை தெரிந்தா வந்தீர்கள் என்ன கூத்து
தெரியுமா இசை எனக்கு முதல்வர் என்றால்
அசைகின்ற விழாவில் எல்லாம் எனை அழைத்தல்
ஆகாது தவறு இதை உணர்வீர் என்றார்

1 மறுமொழிகள்:

said...

மேன்மக்கள்..மேன்மக்களே..!!

அருமை..!! ஐயா..!! அருமை..!!