Friday, January 22, 2010

சொல்லி அருள்

தூரம் எதுவும் தெரியவில்லை
தொலைவா அருகா புரியவில்லை
ஊரில் யாரும் அறியவில்லை
உண்மை உணர்வார் எங்கும் இலை
யாரும் அறியா வண்ணம் அதை
ஏன்தான் மறைத்துத் தொலைக்கின்றாய்
சேரும் வகையில் உயிர் பிரியச்
செய் வதென்னாள் சொல்லி அருள்

0 மறுமொழிகள்: