Sunday, January 31, 2010

வாழ்த்தி நின்றார்

வாழ்த்துக்கள் வணக்கங்கள் என்று என்னை
வளம் பெறவே செய்து நின்றார் அன்புடையோர்
கோர்த்தெடுத்த அன்பாலே நேற்று என்னை
குளிர்வித்தார் தமிழறிந்த பெரியோரெல்லாம்
வேர்த்தாற் போல் நின்றெந்தன் எதிரினிலே
விளையாட்டாய் என் கோபம் கேலி செய்தார்
சேர்ந்தாற் போல் அன்புடையோர் அனைவரும் நான்
செந்தமிழாய் வாழ என்று வாழ்த்தி நின்றார்

0 மறுமொழிகள்: